RSS

shivan








Read comments

முதல்வரின் விருது


இயக்குநர் இமையம் திரு பாரதிராஜா அவர்களின் தெக்கித்திபொண்ணு நெடுந்தொடரில் நடித்த கலைஞர்களுக்கு விருது வழங்கும்விழா மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் தலைமையில் மே 16 , 2010 அன்று சென்னை லீ ராயல் மெரிடியன் ஒட்டலில் நடைபெற்றது..அத்தொடரில் நடித்தமைக்காக நானும் விருதுக்குரியவனாகும் தகுதி பெற்றேன்...

தாயின் அருள்,
தந்தை எனக்களித்த சுதந்திரம்,
உடுக்கையிழந்தவனின் கைகளை விடவும்
உயர்ந்து நின்று இடுக்கன் களையும்
எனது புனித நட்பு,
இவைகள்தான் என்னை ஒவ்வொரு நாளும் புதுப்பிக்க செய்கிறது,
நம்பிக்கையின் நிமித்தம் பயணிக்க செய்கிறது..
உயரமான சிகரங்களுக்கே
வைகறை ஒளியின் முதல் முத்தம் கிடைக்குமாம்,
அந்த முத்தத்திற்காக உயர முயற்சிக்கிறேன்
உங்களின் வாழ்த்துக்களோடு..
கலைத்துறையில் என்னை அறிமுகப்படுத்திய
இயக்குநர் இமையம் திரு பரதிராஜா அவ்ர்களுக்கும்,
முதல் தொடரிலேயே நினைவுபரிசு வழங்கி கவுரவித்த
மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அய்யா அவர்கட்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்!!! உங்கள் வாழ்த்துகள் தொடரட்டும்..நன்றி.!

Read comments

கே.எஸ்.ரவிகுமாருடன் சந்திப்பு...



இயக்குனர் இமையம் திரு பாரதி ராஜா மற்றும் மலேசிய அமைச்சர் திரு டத்தோ சாமிவேலு ஆகியோருக்கான தசாவதார படத்திற்கான சிறப்புக் காட்சி four frames studio வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.....இயக்குனர் இமைய உபயத்தால் அடியேனும் அந்த சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டேன்....அப்பொழுது இயக்குனர் திரு கே.எஸ்.ரவிகுமார் அவர்களை சந்தித்து இணையதள விமர்சனங்கள் குறித்து விவாதித்தேன்....சில விமர்சனங்கள் அவரை பாதித்துள்ளது....முன்னதாக அவரது அயராத உழைப்பின் சாதனைக்கு தலைவணங்கினேன்....இணையதள விமர்சனங்கள் குறித்த எனது பதிவையும் அவரிடம் காண்பித்தேன்...
(அலை பேசியில் படம் பிடித்தவர் அறைகுறையாய் படம்பிடித்துவிட்டார்)

Read comments

இயக்குனர் இமையத்துக்கு நன்றி!






என் வாழ்வின் மிக முக்கிய நாள்..இயக்குனர் திரு பாரதி ராஜா அவர்களை சந்தித்த நாள்...நண்பனை வரவேற்பதற்காக சென்னை விமான நிலையம் சென்றிருந்தேன், அன்றுதான் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது...தூரத்தில் அவசரமாய் நடந்துபோய்கொண்டிருந்தவரை இடை மறித்து சில நொடிகளே அவரிடம் பேசினேன்...அவரது உருவாக்கத்தில் நடிப்பதற்கோ அல்லது உதவி இயக்குனராக சேர்ந்துக்கொள்வதற்கோ ஒரு வாய்ப்பு அருளும்படி கேட்டுக் கொண்டேன்...உடனே எனது அலைபேசி என்னை எழுதிகொடுக்க சொன்னார்....நானும் கொடுத்தேன்....






இரண்டு வாரத்திலேயே அந்த இமையத்திடமிருந்து அலை பேசி மூலம் அழைப்பு வருகிறது அதுவும் அவரே தொடர்பு கொள்கிறார்....





விளைவு தற்பொழுது அவரது "தெக்கத்திப் பொண்ணு" நெடுந்தொடரில் நான்...இன்னும் சில சுவாரஸ்யங்களை விரைவில் பதிவிடுகிறேன்....

(படத்தில் முதியவர் தோற்றத்தில் நான்... flash back ல் வாலிபனாக வருகிறேன்...)

Read comments

நான் தற்பொழுது மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறேன்...நான் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் சுஜாதாவின் நரேந்திரனின் விநோத வழக்கு சென்னையில் பல சபாக்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது...

அந்நாடகத்தில் நான் சுஜாதாவின் வசந்த் பாத்திரத்தில் நடித்து வருகிறேன்...

அந்நாடகம் குறித்த சமீபத்திய பத்திரிக்கை செய்தி இதோ........

Read comments

நான் முதல் முதலாக கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டு பூஜை போடப்பட்ட திரைப்படம் குறித்த பத்திரிக்கை செய்திகள்...













Read comments